Press "Enter" to skip to content

விராட் கோலி, படிதார் அரைசதம் – குஜராத் வெற்றிபெற 171 ரன்களை நிர்ணயித்தது பெங்களூரு

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி, படிதார் ஜோடி 2-வது மட்டையிலக்குடுக்கு 99 ஓட்டங்கள் சேர்த்தது.

மும்பை:

15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது. 

அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர். டூ பிளசிஸ் டக் அவுட்டானார். 

அடுத்து இறங்கிய ரஜத் படிதார் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். படிதார் 52 ஓட்டத்தில் அவுட்டானார். விராட் கோலி 58 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் 2 ஓட்டத்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 170 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

குஜராத் சார்பில் பிரதீப் சங்வான் 2 மட்டையிலக்கு, ஷமி, ரஷீத் கான், பெர்குசன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »