பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்டத்தில் பிப்ரவரி 5 முதல் அதாவது நாளை முதல் ஒரு மாதத்திற்கு அதாவது மார்ச் 4ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.
இதன்படி மதுரை – பழனி பயணிகள் ரயில் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 29 வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், பழனிக்கு மதுரையிலிருந்து ஒரு ரயில் மட்டும் காலை 06.30 மணிக்கு இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பயணிகள் பராமரிப்பு பணி முடிவடையும் வரை தங்கள் பயண திட்டத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
The post ஒரு மாதத்திற்கு ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்: எந்தெந்த ரயில்கள் ரத்து? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes