Press "Enter" to skip to content

டிக்டாக் காணொளி பதிவு செய்யும்போது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

டிக்டாக் செயலியை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரருக்காக மவுத் ஆர்கனைம் வாயில் வைத்து வாசித்து டிக்-டாக் வீடியோ ஒன்று எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென மௌத் ஆர்கன் அவருடைய வாயின் உள்பகுதியில் மாட்டிக்கொண்டதால் அவரால் மவுத் ஆர்கனை வாசிக்க முடியவில்லை. மேலும் மவுத் ஆர்கனை வாயில் இருந்து வெளியே எடுக்கவும் முடியவில்லை

இதனையடுத்து அந்த பெண் மருத்துவமனை சென்று தனது வாயில் உள்ள மௌத் ஆர்கனை அகற்றியுள்ளார். இது குறித்து அந்த பெண் தனது டிக்-டாக் பக்கத்தில் கூறியபோது, ‘என்னை போன்று யாரும் மெளத் ஆர்கனை ரிஸ்க் எடுத்து பயன்படுத்தாதீர்கள். இதனால் தான் அவதியுற்றதனாகவும், மௌத் ஆர்கன் வாயில் மாட்டிக்கொண்ட தனது வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.

The post டிக்டாக் வீடியோ பதிவு செய்யும்போது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »