தமிழக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது
இருப்பினும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக இந்த அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பொதுத்தேர்வு அட்டவணை சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த அட்டவணையின் படி மார்ச் 30 ஆம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வும், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அட்டவணை அறிவிப்பை அடுத்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு உறுதியாக நடைபெறும் என்று என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
The post 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes