ஒரு வீட்டை அடுத்து இரண்டாவது வீடு வாங்கினால் ஏன் இரட்டிப்பு வரி கொண்டு வரக்கூடாது என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஐகோர்ட்டில் இன்று வீடுகள் வாங்குவது குறித்த ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, ‘ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் வரக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் ஒரு தனிநபர் 2வது வீடு வாங்கும்போது அந்த வீட்டிற்கு பத்திரப்பதிவு கட்டணம், வரிகளை ஏன் இரட்டிப்பாக்க கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post இரண்டாவது வீடு வாங்கினால் இரட்டிப்பு வரியா? அதிர்ச்சி தகவல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes