Press "Enter" to skip to content

5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு

5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் என்றும், அதற்கான அட்டவணையும் வெளியான நிலையில் திடீரென பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பொதுத்தேர்வினை ரத்து செய்யக்கோரி பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. இது குறித்து ஆலோசிக்கப்பட்டதன் பின் இதனை ரத்து செய்து பழைய தேர்வு முறையே நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

The post 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »