Press "Enter" to skip to content

ரஜினிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய விசாரணை ஆணையம்: பெரும் பரபரப்பு

ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சார்பாக சம்மன் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக அவரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான போது அது குறித்து ஒரு கருத்தை தெரிவித்ததாகவும், அந்த கருத்து குறித்து அவரிடம் விசாரிக்கவே இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

The post ரஜினிக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்: பெரும் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »