செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் அலுவலக உதவியாளர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் – 03 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 15,700 முதல் 50,000/- வரை
கல்வித் தகுதி :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகங்களிலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை http://www.kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/01/2020012430.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
ஆஸ்பிட்டல் ரோடு,
காஞ்சிபுரம் – 631 502.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.02.2020 மாலை 5.45 மணி
The post 8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 50000 சம்பளத்தில் செங்கல்பட்டு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes