Press "Enter" to skip to content

தலைமை முடிவுக்கு எதிர்ப்பு: சேலம் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு

சமீபத்தில் வீரபாண்டி ஆ. ராஜா பதவி பறிக்கப்பட்டதை அடுத்து சேலத்தில் அவருடைய ஆதரவாளர் கடும் அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன்னர் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரபாண்டி ஆ. ராஜா பதவி பறிக்கப்பட்ட முடிவை எடுத்த திமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியை ஆ. ராஜாவுக்கு மீண்டும் வழங்க கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீரென ஒரு திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தலைமை முடிவுக்கு எதிர்ப்பு: சேலம் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »