Press "Enter" to skip to content

8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 50000 சம்பளத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் ஆய்வக உடனாள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆய்வக உடனாள் – 01 காலிப்பணியிடம் அலுவலக உதவியாளர் – 02 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

ரூ. 15,700 முதல் 50,400/- வரை

கல்வித் தகுதி :

ஆய்வக உடனாள் : 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகங்களிலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை http://www.kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சுயவிலாசமிட்ட ரூ. 5/-க்கான அஞ்சல்வில்லை ஒட்டிய உறையோடு இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/01/2020012476.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
ஆஸ்பிட்டல் ரோடு,
காஞ்சிபுரம் – 631 502.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.02.2020 மாலை 5.45 மணி
The post 8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 50000 சம்பளத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »