சென்னை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
உதவியாளர் / இளநிலை எழுத்தர் / : 320 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 5,000 முதல் 47,600/- வரை
கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
01-01-2019 அன்றுள்ளபடி 18 முதல் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம் :
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ. 250/- விண்ணப்பக் கட்டணம் வரைவோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது அதன் கிளைகளில் நேரடியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://chndrb.in/index.php ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://chndrb.in/how_apply_online.php பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2020 மாலை 5.45 மணி
The post சென்னை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes