சென்னையில் ரயில் மோதி என்ஜீனில் சிக்கிய இளம்பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே சென்னை-பெங்களூர் டபுள் டக்கர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் ஒருவர் மீது மோதியது. இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது
இந்த ரயிலின் இன்ஜின் பகுதிக்கு அடியில் அந்த இளம் பெண் சிக்கியிருந்தால் உடனடியாக பேசின்பிரிட்ஜ் ரயில்வே போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
சில நிமிடங்களில் அந்தப் பெண் ரயில் இன்ஜினில் இருந்து மீட்கப்பட்ட போது அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
The post சென்னையில் ரயில் மோதிய இளம்பெண் உயிருடன் மீட்பு! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes