டெல்லியில் இன்று சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்று உள்ளது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் முதல்வர் பதவியை ஏற்க உள்ளார்
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் ’டெல்லியில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை துப்பாக்கியால் சுட வேண்டும் என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர்களை டெல்லி பொதுமக்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டி உள்ளனர் என்று கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
The post துப்பாக்கியால் சுட கொண்டவர்களை துடைப்பத்தால் அடித்து விரட்டிய டெல்லி மக்கள்: பிரபல நடிகர் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes