Press "Enter" to skip to content

எமி ஜாக்சனை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலை சம்பவம்

தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமான எமி ஜாக்சனை, தற்கொலை சம்பவம் ஒன்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் படம் மூலம் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, கெத்து, தங்க மகன், தெறி, தேவி, 2.0 என சில படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் கேர்ள்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் இவர் நடித்து வந்தார். அண்மையில் தன் காதலரை திருமணம் செய்துகொண்டவர் குழந்தையும் பெற்றெடுத்தார். கர்ப்ப காலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் தற்போது உருக்கமான பதிவை சோகத்துடன் வெளியிட்டுள்ளார். 

இதில் விசயம் என்னவென்றால் பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரோலின் காதலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் வருத்தம் தெரிவித்ததோடு, மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் டிவி சானல்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »