Press "Enter" to skip to content

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து – சங்கர் உருக்கம்

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குனர் சங்கர் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார்.

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன் 2 படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த போது கடந்த 19ம் தேதி இரவு கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசனும், தயாரிப்பு நிறுவனம் லைகாவும் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் மிகவும் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார்.

அதில், ‘படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் இருந்து நான் அதிர்ச்சியில் உள்ளேன். என் உதவி இயக்குனர் உள்ளிட்டோர் இழப்பால் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். அந்த கிரேன் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »