உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பயத்தில் இருந்து மீள்வதற்கான சிறந்த வழியை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு அனைவரும் இந்திய பொருட் களை வாங்கி நமது வணிகர்களை வாழ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு ஓய்வை கழிப்பது குறித்து அவர் கூறியதாவது:- எனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை நல்லபடியாக பயன்படுத்தி வருகிறேன். விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது ஒரு புறம் இருந்தாலும், உடற்பயிற்சிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்.
உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தையும் மூடிவிட்டதால் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருக்கலாம் என்று பலர் சொல்கிறார்கள். அது தவறு. இந்த சமயத்திலும் வயிறு, கால் தொடர்பான யோகாசனங்களை செய்து வருகிறேன். உடற்பயிற்சிகள் செய்து கொண்டே இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் பேசுகிறேன். பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபட்டும் நிறைய கலோரிகளை குறைக்கிறேன். அதே மாதிரி தியானமும் செய்கிறேன்.
வீட்டில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மீளவும், கொரோனா வியாதி வந்து ஏதோ ஆகிவிடப்போகிறது என்ற பயத்தில் இருந்து விடுபடவும் தியானம்தான் சிறந்த வழி. அதை செய்யுங்கள். 6 மாதமாக நான் அணியாமல் வீட்டில் சேர்த்து வைத்திருந்த உடைகளை பீரோவில் இருந்து அகற்றி விட்டேன். எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். இந்த நேரத்தில் புதுசுபுதுசாக சமையல் செய்து வருகிறேன்”.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Source: Malai Malar