விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு உணவு, கையுறைகள், முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், போலீசாருக்கு உணவு, கையுறைகள், முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு 200 பேருக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.
Source: Malai Malar