Press "Enter" to skip to content

பிரியா வாரியர் இதற்காகத்தான் சமூக வலைதளத்தில் இருந்து விலகினாராம்

72 லட்சம் பாலோவர்கள் இருந்தும் நடிகை பிரியா வாரியர் திடீரென சமூக வலைதளத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. லட்சக்கணக்கானோர் ரசிகர்களானார்கள். குறுகிய நாட்களிலேயே பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 72 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.

இது இந்தி பட நடிகைகளை மிஞ்சிய சாதனையாக பேசப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அந்த படம் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் பிரியா வாரியர் திடீரென்று இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி உள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியர் பற்றி சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். கேலியும் செய்தனர். அவரை மோசமாக திட்டவும் செய்தார்கள். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனாலேயே இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »