Press "Enter" to skip to content

5 வருடங்களுக்குப் பிறகு வில்லியாக களமிறங்கும் ரோஜா

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு வில்லியாக ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழில் மட்டும் அல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘புஷ்பா’ என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »