Press "Enter" to skip to content

அப்பாவும், மகனும் விரைவில் குணமடைய விரும்புகிறேன் – கமல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என  திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் விரைந்து குணமாக விரும்புகிறேன். மேலும் இந்திய மருத்துவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் தங்கள் சிகிச்சையால் இருவரையும் குணப்படுத்தி விடுவார்கள் என்று நம்புகிறேன். அமிதாப் பச்சன் அவர்கள் குணமாகி மீண்டும் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

I wish both the Bachchans @SrBachchan@juniorbachchan a speedy recovery.

I trust the Indian doctors and Sr. Bachchan’s will to overcome health hazards. Get well soon and become an icon again for survival and wellness.

— Kamal Haasan (@ikamalhaasan)

July 12, 2020

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »