Press "Enter" to skip to content

சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால் ‘கே.ஜி.எப் 2’ படத்துக்கு சிக்கல்

சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எப்’ . யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின்  2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும், 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளது. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் ஒன்று. தற்போது சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சைக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக அறிவித்துள்ளதால், கே.ஜி.எப் 2 படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

சஞ்சய் தத் சிகிச்சை முடிந்து வரும் வரை படக்குழு காத்திருப்பார்களா அல்லது டூப் வைத்து சண்டை காட்சிகளை படமாக்குவார்களா என்பது விரைவில் தெரியவரும். இதனால் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 23-ந் தேதி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »