Press "Enter" to skip to content

‘அருமைக் கலைஞன்… புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ – கமல் குறித்து வைரமுத்து உருக்கம்

திரைத்துறையில் 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் கட்சி தலைவராகி இருக்கிறார். கமல்ஹாசனின் 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து கமல் குறித்து பதிவிட்டுள்ளதாவது: ‘பரமக்குடியின் அருமைக் கலைஞன். பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு. மரபுகடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தனிவிருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும் ‘கலையாக் கலையே கமல்’. என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »