கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
அதில் நடிகர் தனுஷ், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக எல்லாரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Please pray for SPB sir ! 🙏🙏🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அற்புதமான குரலால் மற்றவர்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி’.
இசையமைப்பாளர் அனிருத், ‘விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’.
Get well soon dear SPB sir.. praying for your speedy recovery!
— Anirudh Ravichander (@anirudhofficial)
இயக்குனர் பாரதிராஜா, ‘என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான் காத்திருக்கிறேன்’.
என் நண்பன்
பாலு,
தன்னம்பிக்கையானவன்..
வலிமையானவன்..
அவன் தொழும் தெய்வங்களும்
நான் வணங்கும்
இயற்கையும்
அவனை உயிர்ப்பிக்கும்..
மீண்டு வருவான்
காத்திருக்கிறேன்.அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/8gyemadGpg— Bharathiraja (@offBharathiraja)
நடிகை ராதிகா சரத்குமார், ‘எஸ்.பி.பி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்’
இவ்வாறு பல பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக கூறிவருகிறார்கள்.
Source: Malai Malar