காதலர்களான நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா சென்றுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நயன்தாராவுடன் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுத்து பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் கூட ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக இருவரும் தனி விமானத்தில் கேரளாவுக்கு சென்றிருந்தனர்.
ஓணம் கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கோவாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். வழக்கம் போல் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், “கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து மிக நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா சென்றிருக்கிறோம்,” என பதிவிட்டுள்ளார்.
Source: Malai Malar