Press "Enter" to skip to content

தன்னை பற்றி செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிநீதி மன்றத்தில் ரகுல் பிரீத் சிங் மனு

போதை பொருள் வழக்கில் தன்னை பற்றிய செய்திகள் வெளியிட இடைக்கால தடை கோரி, டெல்லி உயர்நீதிநீதி மன்றத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரபல நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் உள்பட பலருக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தேசிய போதை மருந்து தடுப்பு துறை (என்.சி.பி) நடத்திய விசாரணைக்கு ஆஜராகினர். 

இந்நிலையில், ஊடகங்கள் தனது புகழை கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக கூறி நடிகை ரகுல் பிரீத் சிங், டெல்லி உயர்நீதிநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “எனக்கு கடந்த 24ந் தேதி வாட்ஸ்-அப் மூலம் அதிகாரப்பூர்வமான அழைப்பு கிடைத்தது. அடுத்த நாள் என்.சி.பி. முன் விசாரணைக்கு ஆஜராகி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தேன். ஆனால், என்னை பற்றி பல தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. 

ஏற்கனவே என்.சி.பி.க்கு நான் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பட்டுள்ளது. அது இன்னும் வெளிவராத நிலையில், என் புகழை கெடுப்பது போல் ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகின்றன. எனவே, இந்த வாக்குமூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை, இந்த வழக்கில் என்னை பற்றி எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »