Press "Enter" to skip to content

ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் பருவம் 4ல் போட்டியாளராக இருக்கும் ஷிவானி, ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »