தமிழ் திரைப்படத்தில் இளம் கதாநாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று பேட்டியளித்துள்ளார்.
தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளமை இதோ இதோ’ படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது. நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்னுடைய குடும்ப நண்பர். சிறந்த நடிகர். படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது.
செட்டில் 5 பேர்தான் இருந்தோம். நானே மேக்கப் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்தேன். இந்த அனுபவம் சிறப்பாக இருந்தது’ என்றார்.
பெண் இயக்குனர் படத்தில் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு, என்னை பொருத்தவரை ஆண் இயக்குனர், பெண் இயக்குனர் என்று பார்க்க முடியவில்லை. இயக்குனர்கள் எல்லோரும் குரு. அவர்களை சொல்லுவதை திறமையாக செய்ய வேண்டும் அதுதான் என் வேலை. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
என் கனவு ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு படம் மட்டும் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது இப்போ இல்லை. விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.
‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[embedded content]
Source: Malai Malar