நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தி படம் ஒன்று உருவாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது சனா கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திடீர் முடிவை அறிவித்துள்ளார். இனிமேல் திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை. இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வாழ்வது என முடிவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் டிக்டாக்கில் பல காணொளிக்களை வெளியிட்டிருந்தார். இவர் பின் தொடர்ந்தவர்கள் அதிக பேர். இந்நிலையில் சனாகானின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[embedded content]
Source: Malai Malar