தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய்பல்லவி குழந்தைகளை நெகிழ வைத்திருக்கிறார்.
பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமான சாய்பல்லவி தமிழில் மாரி 2 என் ஜி கே ப டங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி எனும் படத்தில் சாய் பல்லவி தற்போது நடித்து வருகிறார்.
அதற்கான படப்பிடிப்பின்போது கிராமத்து குழந்தைகளுக்கு நடிகை சாய் பல்லவி மெஹந்தி வைத்து அசத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அங்கிருக்கும் கிராமத்து குழந்தைகளுக்கு நடிகை சாய் பல்லவி மெஹந்தி வைத்தார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், ஆச்சரியப்பட்ட நடிகைகள் சமந்தா, அனுபமா ஆகியோர் சாய்பல்லவியை புகழ்ந்துள்ளார்கள்.
[embedded content]
Source: Malai Malar