கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டியில் இருக்கும் அர்ச்சனா, மகன் பாசத்திற்காக ஏங்கி அழும் காணொளி வெளியாகி இருக்கிறது.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, பாலாஜி, ஆஜித், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.
கடந்த சில தினங்களாக பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது புதிய புரமோ வெளியாகி இருக்கும் நிலையில், அதில், அர்ச்சனா பாலாவிடம் கண் கலங்கி கதறி அழுவது போல காட்டப்படுகிறது. மேலும், ”நீ எனக்கு புள்ளையா வேணும்டா.. எனக்கு புள்ளை கிடையாதுடா..” என அர்ச்சனா கதறி, பாலா அவரை தேற்றுவது போலவும் எமோஷனலாக இந்த புரமோ வெளியாகியுள்ளது.
[embedded content]
Source: Malai Malar