Press "Enter" to skip to content

திரைப்படங்களை வெளியிடும்போது கட்டுப்பாடு கூடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற 10- ந்தேதி திரைப்படங்களை வெளியிடும்போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை:

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது,

தமிழகத்தில் வருகிற 10- ந்தேதி திரைப்படங்களை வெளியிடும்போது இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். புதிய படங்களை வெளியிட்ட பிறகு விபிஎப் கட்டணம் விதிப்பது பற்றி பேசுவது சரியாக இருக்கும். 

திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ளதால் உடனே பேசி தீர்வு காண்பது இயலாத காரியம், தமிழ்மொழியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது அதிமுகவிற்கு தெரியும். 

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுகவினர் தமிழ்மொழியை தேசிய மொழியாக அறிவித்திருக்கலாமோ என கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »