Press "Enter" to skip to content

நடிகர் விஜய் காவல்துறையில் திடீர் புகார்

நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் அமைந்து உள்ளது. இங்கு விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகிய இருவரும் பல வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும் அந்த பொறுப்பில் இருந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்து நீக்கம் செய்து அறிவித்தார். இதனால் இரண்டு பேரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.

இதையடுத்து நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர். அதில், தனது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் இரண்டு பேரையும் காலி செய்து தரும்படி கூறியிருந்தார். வீட்டைக் காலி செய்ய அவகாசம் வேண்டும் என இருவரும் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும் இதுபற்றி விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »