Press "Enter" to skip to content

மறுதயாரிப்பு படங்களுக்கு எதிரி நான் – நடிகை மஞ்சிமா மோகன்

வெற்றியடையும் படங்களை பிற மொழிகளில் மறுதயாரிப்பு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தான் மறுதயாரிப்பு படங்களுக்கு எதிரானவள் என நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

அதில் “மலையாள படங்கள் பல மொழிகளில் மறுதயாரிப்பு பண்ணுகிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லையே” என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகன் கூறியிருப்பதாவது: “சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நானும் ‘குயின்’ மறுதயாரிப்புகில் நடித்துள்ளேன். 

மறுதயாரிப்பு படங்களுக்கு எதிரானவள் நான். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படம் மலையாளத்தில், தமிழ் படம் தமிழில், தெலுங்கு படம் தெலுங்கில் தான் பார்க்க வேண்டும். வெற்றியடையும் படங்களை மறுதயாரிப்பு செய்வதில் உடன்பாடில்லை. ஏன் மறுதயாரிப்பு செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை”. இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »