Press "Enter" to skip to content

தடுப்பூசி போட்டுக் கொண்ட சூரரைப்போற்று பட நடிகருக்கு கொரோனா பாதிப்பு

தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், சூரரைப்போற்று பட நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான், மாதவன், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் பகைவனாக நடித்திருந்தார். 

இதில் அதிர்ச்சி என்னவென்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் தற்போது அதையும் மீறி அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »