Press "Enter" to skip to content

வருத்தம் தெரிவித்த ஆர்யா… வழக்கை முடித்த நீதிமன்றம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, நீதிமன்றத்தில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்ததாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அம்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது ஆர்யா நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீது போடப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »