வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய திரைப்படம்த் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 51வது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar