நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தலுக்கு முந்தைய நாள் டுவிட் செய்திருந்த அவர், தேர்தலில் ஓட்டு போடாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. மருத்துவருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன்.
எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற ஒவ்வாமை ஏற்படும். அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி இருந்ததால் மட்டுமே இவ்வாறு ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்” என்று பதிவிட்டுள்ளார்.
வணக்கமும் நன்றியும்!ஜனநாயக கடமையை சீராக செய்த
சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும்,இயலாமையும்.
இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது மருத்துவருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே— Radhakrishnan Parthiban (@rparthiepan)
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…
— Radhakrishnan Parthiban (@rparthiepan)
[embedded content]
Source: Malai Malar