சந்தானம் படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் ‘லொள்ளு சபா’ மாறன், தன்னை பற்றி வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கில்லி, தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ‘செங்கல்பட்டு’ மாறன் இன்று காலமானார். ஆனால் இந்த தகவலுடன் ‘லொள்ளு சபா’ மாறனின் புகைப்படம் இணைந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுபற்றி, நடிகர் சந்தானம் படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் ‘லொள்ளு சபா’ மாறனிடம் தொடர்பு கொண்டதற்கு, “அட அது நான் இல்லப்பா… அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.
சில ஊடகங்களில் என் புகைப்படத்தை போட்டு அந்த செய்தியை வெளியிட்டன. பின்னர் அதே ஊடகங்களில் இருக்கும் நண்பர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு தெளிந்த பின், மீண்டும் அவற்றை சரி செய்து விட்டனர். நேற்றைய தினம் கூட நகைச்சுவை நடிகர் அண்ணன் நெல்லை சிவா மரணமடைந்தார். தினமும் நிகழும் இப்படியான மரண சம்பவங்கள் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.” என்றார்.
[embedded content]
Source: Malai Malar