நடிகர் அல்லு அர்ஜுன் 45 வயதிற்கு மேற்பட்ட தனது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.
தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். அவரது நடிப்பில் ‘புஷ்பா’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
கொரோனாவின் இரண்டாவது அலையால், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் தன்னிடம் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்துள்ளதாக அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். அவரின், இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
[embedded content]
Source: Malai Malar