Press "Enter" to skip to content

பிரபல கிரிக்கெட் வீரரை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ‘கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். சிறப்பான நடிப்பு மற்றும் அழகான சிரிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சமூகவலைதளங்களிலும் எப்போதும் தீவிரமாக இருக்கிறார். கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். தன்னுடயை பதிவுகளிலும் ராயல்சேலஞ்சர்ஸ் அணியையும், வீரர்களின் விளையாட்டையும் புகழ்ந்து தள்ளி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 

இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கே ‘ஐ.பி.எல் கோப்பை’ எனக் கூறி ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அவருடைய ஒவ்வொரு பதிவையும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அண்மையில் திடீரென இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.

அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஐ.பி.எல் போட்டியில் பெங்களுரு அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாலும், கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர். அப்போது, கிரிக்கெட்டில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, மகேந்திரசிங் தோனி என்றார். கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் அணுகுமுறை, மட்டையாட்டம், கேப்டன்சி என அனைத்தையும் தான் ரசிப்பதாகவும், கிரிக்கெட்டுக்கு தேவையான 100 விழுக்காட்டையும் அவர் கொடுப்பதாக புகழ்ந்து தள்ளினார். மேலும், தோனியில் மிகத் தீவிர ரசிகை என்றும் ராஷ்மிகா தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »