தமிழ் திரைப்படத்தின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள் என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் திரைப்படத்தின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தனது தாய் இறந்தது குறித்து உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
அதில், “இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன், வெளிப்படையாக எங்கள் இருவருக்குமே தெரியாது, என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக அது இருக்கும் என்று!
அவர் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் திரும்பி வருவார் என்று எனக்கு பலமான நம்பிக்கை இருந்தது, ஆனால் மே 25-ஆம் தேதி (2008) சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை!” என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar