Press "Enter" to skip to content

சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

தமிழ் திரைப்படத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா ரசிகர்களுக்கு பயப்படுவதாக கூறியிருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சூர்யாவின் தம்பி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்போதும் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40′ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர். படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது. படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க.. ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »