Press "Enter" to skip to content

நோயாளிகளுக்கு உதவி செய்ய நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு

ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால் நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் உதவிய செய்ய இருக்கிறார்.

ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் கணினிமய மூலம் உதவிகள் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் நிதி அகர்வால், கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே டிஸ்டிரிப்யூட் லவ் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளார். இதில் ஒரு குழுவை நியமித்து எந்தெந்த பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து உடனுக்குடன் இந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்யப் இருக்கிறார் நிதி அகர்வால்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »