Press "Enter" to skip to content

அடுத்த படத்திற்கு தயாரான வெங்கட் பிரபு… புதிய அறிவிப்பு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் ‘மாநாடு’ இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் இது.

இயக்குனர் வெங்கட் பிரபு – தயாரிப்பாளர் முருகானந்தம்

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »