தனது பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர் நடிக்க வந்த புதிதிலிருந்தே, தனது பெயரை ஜனனி ஐயர் என்று தான் குறிப்பிட்டு வந்தார். சமூக வலைதளங்களிலும் அந்தப்பெயரையே பயன்படுத்தி வந்தார்.
நடிகை ஜனனி டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
இந்நிலையில், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தனது பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி உள்ளார் நடிகை ஜனனி. அவரின் இந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை நடிகை ஜனனி விளக்கவில்லை.
[embedded content]
Source: Malai Malar