நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) இருப்பதை நான் விரும்புவதில்லை என்று பூமிகா சாவ்லா கூறி இருக்கிறார்.
நடிகை பூமிகா சாவ்லா தமிழில் விஜய் உடன் பத்ரி படத்தின் மூலமாக அறிமுகமானார். இதையடுத்து ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் பூமிகா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.
தற்போது அதற்கு பூமிகா பதிலளித்துள்ளார். “போலி செய்திகள் அவை. என்னை பிக்பாஸில் இருந்து அழைக்கவில்லை. அப்படி அவர்கள் அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். என்னை பருவம் 1, 2, 3 ஆகியவற்றில் பங்குகொள்ள அழைத்தார்கள், அதன்பிறகும் கூட அழைத்தார்கள். ஆனால் நான் செல்ல மறுத்துவிட்டேன்.
இந்த பருவத்தில் என்னை அழைக்கவில்லை. நான் தற்போதும் அதை ஏற்க மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) இருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar