மணிரத்னம் தயாரிப்பில் நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி வருகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.
அதில் கவுதம் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இதன்மூலம் வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து இவர்கள் இணைந்துள்ளனர். இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்டின் நடித்துள்ளார்.
இந்நிலையில், கவுதம் மேனன் – சூர்யா கூட்டணியில் உருவாகி உள்ள தொடரின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
[embedded content]
Source: Malai Malar