தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தமிழில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி, வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய யுவராஜ், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
[embedded content]
Source: Malai Malar