Press "Enter" to skip to content

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்? – ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்த ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்துள்ளார்.

சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் குறுகிய காலகட்டத்தில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாகி விட்டார். இதுதவிர பாலிவுட்டிலும் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

ராஷ்மிகா

அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடிய அவர், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக ரசிகர் ஒருவர் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கூலாக பதிலளித்த ராஷ்மிகா, “நான் சிகரெட் பிடித்ததே இல்லை. அதேபோல் சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »