முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்து உள்ளனர். தற்போது காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறார்.
கோஷ்டி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்குகிறார். இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர்.
கோஷ்டி படக்குழுவினர்
இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, சத்யன் உள்பட 30 நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் புரமோ பாடலுடன் இதன் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் பட விளம்பரம், பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
[embedded content]
Source: Malai Malar